கோவை ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்த தனிவசதி

கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மத்திய ரயில்நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாற்றுத் திறனாளிகள் தனியாக வாகனங்கள் நிறுத்த வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



தற்போதுள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒருபுறம், அதாவது ரயில்நிலைய முன்புற வாசல் அருகே மட்டும் இடவசதி தரப்பட்டிருந்தது. தற்போது, நிறுத்துமிடத்தின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் வரும் மாற்றுத்திறனாளிகள் அவற்றில் இருந்து இறங்கி எளிதாக ரயில்நிலையத்தின் உள் செல்ல வசதியாக, ரயில்நிலைய முன்புற வாசல் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பணிகள் நிறைவுற்றவுடன், அதற்கான குறியீட்டுப்பலகைகள் அந்தந்த இடங்களில் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...