சாலை பாதுகாப்பு வாரம் : நீலகிரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நீலகிரி : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த வாரவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

அதன்படி, உதகையில் கடந்த வார நாட்களில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகளில் வாகனத்தை இயக்குவது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று உதகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர். 

இதன் ஒரு பகுதியாக வாகனங்களை இயக்குவது குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் வெள்ளை உடை அணிந்திருத்தல் வேண்டும், வாகனத்தை இயக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...