கோவையில் அதிகாரிகள் சோதனை : 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காந்திபுரம், உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 48 கிலோ அடியுள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பழ மார்க்கெட்







இதே போல், உக்கடம் பழ மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உபயோகிக்க முடியாத நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த 2.5 டன் ஆரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவையில் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...