சாலை பாதுகாப்பு வாரம் : கோவையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கோவை : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த வாரவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று கோவையில் மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். 



வ.உ.சி பூங்கா வளாகத்தில் தொடங்கிய இந்த இரு சக்கர வாகன பேரணியானது. அவினாசி சாலை, லட்சுமி மில் வழியாக சென்று காந்திபுரம் வழியாக வந்து மீண்டும் வ.உ.சி பூங்கா வந்தது. பின்னர், நிறைவடைந்தது.

இந்த பேரணி குறித்து மாநகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறுகையில், "‘சாலை விபத்துக்களைத் தடுக்க ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சாலை விபத்துகளினால் தனி நபர், குடும்பம், சமுதாயம் என பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே போகிறது. எனவே, வாகன ஓட்டிகள் தனி கவனத்துடன் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்து இல்லாத கோவை மாநகராக மாற்ற முன் வர வேண்டும்." என்றார். 



இந்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...