காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கால அவகாசம் கோரியது கண்டனத்திற்குரியது : உழவர் உழைப்பாளர் கட்சி

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மே 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவு அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்திய நிலையில், மீண்டும் 2 வாரகாலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் கடனையும் கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை வைத்ததுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்காவிட்டால் மக்கள் மன்றத்திலே கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவோம். மே 3-ம் தேதி திருச்சியில் கூடவுள்ளோம். அன்றைய தினம் மத்திய அரசு வரைவு திட்டம் தாக்கல் செய்யவில்லை எனில், போராட்டம் அறிவிக்கப்படும்," என்றார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...