யானைகள் வளர்ப்பு முகாமில் பங்கேற்ற யானைகளின் உடல் எடை பரிசோதனை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது. 

முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமையொட்டி, வளர்ப்பு யானைகள், யானை சவாரி மற்றும் இதர பணிகளுக்கு ஈடுபடுத்தப்படாமல் 48 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. வளர்ப்பு யானைகளுக்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு யானைகளின் உடல் திறனுக்கேற்ப புரதச்சக்தி உள்ள மருந்து பொருட்களும் கொடுக்கப்பட்டு வந்தன.



இந்த நிலையில், கடந்த மாதம் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், இன்று வளர்ப்பு யானைகளின் உடல் எடை பரிசோதனை, தொரப்பள்ளி எடை பரிசோதனை மையத்தில் நடைபெற்றது. இதில், 14 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் வளர்ப்பு யானைகளின் உடல் திறன் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் வண்டலூர் பூங்காவிலிருந்து வந்த யானைகளும் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...