மேட்டுப்பாளையத்தில் குடியிறுப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் - வீடியோ

கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகளின் நடமாட்டமும் இதனால் ஏற்படும் சேதங்களும் அதிகரித்தபடி உள்ளது. இதுவரை உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வந்தது.

ஆனால், அண்மைக் காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத்துவங்கியுள்ளது. குறிப்பாக நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் சேதப்படுத்த தொடங்கியுள்ளது.

இரவு நேரங்களில் மட்டும் வனத்தை விட்டு வெளியேறிய யானைகள் தற்போது அதிகாலை நேரத்திலும் வரத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை நெல்லிமலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை அங்குள்ள சமயபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலை வழியாக எவ்வித அச்சமும் இன்றி சென்றது. அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் காட்டு யானை சாலையில் நடந்து வருவதைப் பார்த்து வீட்டிற்குள் சென்று ஒடி ஒளியும் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் சமயபுரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் இரண்டு குடியிருப்பினையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அச்சத்தில் உரைந்துள்ள சமயபுரம் கிராம மக்கள் இனியும் காலம் கடத்தாமல் வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...