அரசு வேலை எதற்கு? பீடா கடை வையுங்கள்: பா.ஜ.க. முதலமைச்சர் அட்வைஸ்

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா-வில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிப்லக் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது நகைப்புக்குரிய கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மகாபாரதம் காலத்திலேயே, இணையம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள்? என கேள்வியை எழுப்பினார்.

இப்போது, பீடா கடையை வையுங்கள் என்ற அவருடைய அட்வைசும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது.

திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிப்லக் குமார் தேவ், "அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை உள்ளது. இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்." என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...