அ.தி.மு.க அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை: கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளில் துணை ராணுவ படையினர் வந்துள்ளது பயிற்சிக்காக மட்டுமே தவிற வேறு எதுவும் இல்லை. டி.டி.வி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரது இரண்டு கட்சிகளும் நிலைக்காது. விரைவில் காணாமல் போய்விடுவார்கள். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தெலுங்கானா முதல்வரும் எந்த நிலையில் பேசினார்கள் என்று தெரியாது. தற்போது தான் அதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன்.

அ.தி.மு.க.

பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தின் போது வழங்கப்பட்டு வரும் நிதி எப்போதும் நிறுத்தப்படாது. அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.

கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் வழக்கம் போல் சின்னம் கிடைத்துவிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...