லங்கா கார்னர் பகுதியில் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றியது மாநகராட்சி

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர். 

அரசு மருத்துவமனை அருகே சுமார் 30 வருடங்களாக இயங்கி வந்த இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், டீ கடைகள், மின் சாதனக் கடைகள், கண் கண்ணாடி கடைகள் என மொத்தம் 14 கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், கட்டிட வளாகத்தின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்ததால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்தை இடிக்க முடிவு செய்த மாநகராட்சி ஒரு வருடத்திற்கு முன்பே வளாகத்தில் உள்ள 14 கடைகளையும் காலி செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சில கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை மேற்கோள்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கடந்த மாதம் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனையடுத்து, இன்று காலை கடையில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டிட வளாகம் இடித்து அகற்றப்பட்டது. 

கட்டிடம் அமைக்க கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...