ரூ.700 கோடி மோசடி செய்த நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்திடம் இருந்து வர வேண்டிய 700 கோடி ரூபாயை பெற்றுத் தரக்கோரி மாவட்டட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்திடம் இருந்து வர வேண்டிய 700 கோடி ரூபாயை பெற்றுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.



மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த டிஸ் ஆக்ரோ டெக் பொது நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் மாதந்திர மற்றும் நிரந்திர வைப்பு திட்டத்தில் ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியிலும் இதன் கிளை இயங்கி வந்த நிலையில், இந்த நிறுவனத்தின் முகவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்று செலுத்தி வந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 1,137 கோடி மோசடி நடைபெற்றதாகவும், அதில், மூன்று லட்சம் பேருக்கு ரூ. 500 கோடி வரை நிர்வாகம் திருப்பி கொடுத்தாகக் கூறப்படுகிறது. மீதம் உள்ள ஒன்பது லட்சம் பேருக்கு ரூ. 700 கோடி பண பலன்களை அளிக்காத நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் குழு அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், 3 ஆண்டுகள் கடந்தும் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் கிடைக்கததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. முகவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் சேர வேண்டிய தொகை திரும்ப கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...