சாலை அமைக்க விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று கோவை அன்னூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 8 கி.மீ., நீளம், 150 அடியில் அகல வட்ட சாலை அமைக்க கரியாம்பாளையத்தில் இருந்து தாசம்பளையம் வரை அவிநாசி-அன்னூர் சாலையை இணைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் அளவீடு செய்து நெடுஞ்சாலை துறையினர், கல் பதித்து வருகின்றனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட வட்டசாலை திட்டத்தை மாற்றி, தற்போது முன் அறிவிப்பின்றி தங்களது விவசாய நிலங்களில் கல் பதித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தானியம், கரும்பு, தென்னை, மஞ்சள், வாழைகள் பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட்ட சாலை விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதால், 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வட்டசாலை அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நண்மை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முறையான அளவீடு செய்து விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு கூறினர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கும் மனு அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...