உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஜிப் லைன் சாகச விளையாட்டு

நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.


நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



உதகையில் கேபிள் கார் திட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கேபிள் கார் திட்டம் கானல் நீராக உள்ள நிலையில், தொட்டபெட்டா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில், இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 102 அடி உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டு, கேபிள் கார் போன்ற ஜிப் லைன் சாகச விளையாட்டு, கமோண்டோ பயிற்சி, தொங்கு பாலம் போன்ற விளையாட்டுகள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



 

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சாகச விளையாட்டுகள் ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு திறமையை வளர்ப்பதற்கும், அவர்களின் அச்சத்தை போக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...