சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட தி.க.,வினர்

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயிலை இயக்கக் கோரியும், கோவையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.



இந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்கவே அகலப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்பட்டும், ரயில்களை அதிக அளவு இயக்கப்படுவதில்லை. ரயில்வே துறையால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...