நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவிற்கு மேலும் 2 வாரகாலம் அவகாசம்

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆளுநர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆளுநர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அவர்களது காவல் முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் அழைத்து சென்றனர். ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தால் நீதிபதி பரமசிவம் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, விருதுநகர் சிறையிலேயே தங்களை அடைக்க வேண்டும் எனவும், மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என முருகனும், கருப்பசாமியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதி பரமசிவம், விருதுநகர் சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார். 

இவ்விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார். மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...