இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை அகற்றியவர்கள், மொழியை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் : டிடிவி தினகரன்

கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது :- சென்னையில் மதுசூதனனுடன் இருக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்தது போகாத ஊருக்கு அவர் வழி சொல்வது போல இருக்கிறது. திவாகரன் போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. யாருடனும் எனக்கு நெருடல் கிடையாது. சதிகாரர்களின் வலையில் விழுந்தவர்கள் இப்படிப் பேசுகின்றனர். 

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க., வினருக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி கிடையாது. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க., செயல்படுகின்றனர். எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது, என்றார். 

மேலும், "திவாகரன் மற்றும் தினகரன் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என முதலமைச்சர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் முதலமைச்சர்கள் பலர் காணாமல் போனது போல, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தையே இந்தியா வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டனர். தமிழ் மொழியையா மத்திய அரசில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப்போகின்றனர்," எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து, ரூ. 20 விவகாரத்தில் ஆர்.கே. நகரில் முற்றுகையிட்ட பெண்கள் மதுசூதனன் ஆட்கள் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்ட தினகரன், "இதுபோல நிறைய ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது. மேலும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் நடத்துகின்றனர். சட்டரீதியாக இதைப் போராடி வெல்வோம். திவாகரன் குறித்த எந்த ஒரு கேள்விகளுக்கு பதில் சொல்ல போவதில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...