உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி: சுற்றுலாப் பயணிகளை கவர திட்டம்

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

உதகையில் வரும் 5-ம் தேதி முதல் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு கோடை சீசனை சுற்றுலாப் பயணிகள் பல புதுமைகளுடன் கண்டு களிக்கும் வகையில் சுற்றுலா கமிட்டி பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதன் முதற் கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா சாலையில் கோடை விழாவில் முதல் முறையாக இரவு நேர அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.



உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இனி பொதுமக்கள் இரவில் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இரவு நேர அங்காடிகளை நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அந்த அங்காடி மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர அங்காடி விற்பனை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் சீசன் முடியும் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...