பள்ளி சிறார்களுக்கான கட்டணமில்லா கோடைக்கால கலைப்பயிற்சி முகாம்

கோவை: கோவை மண்டல அலுவலகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டணமில்லா கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

கோவை: கோவை மண்டல அலுவலகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டணமில்லா கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- சிறார்களின் கலை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இளம் வயதில் கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக சிறுவர், சிறுமியருக்கு பகுதி நேர கலைப்பயிற்சியினை அளித்து வருகிறது. கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் சிறார்கள், இக்கோடைக்கால விடுமுறையில் பயனுள்ள வகையில் கலைகள் பயின்றிட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக்கால கலைப்பயிற்சி முகாம், வரும் மே 09 முதல் மே 18-ம் தேதி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட உள்ளது.

குரலிசை (வாய்பாட்டு), பரதநாட்டியம், ஓவியம், குங்ஃபூ (தற்காப்புக் கலை) ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் இம்முகாமில் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. சிறவர் மன்ற சந்தாவாக ரூ. 100 மட்டும் செலுத்தப்பட வேண்டும். பயிற்சி நிறைவு நாளன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கான முன்பதிவு மே 3-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புவோர், கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9751528188 என்ற எண்ணிலோ அல்லது மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தை 0422 2610290 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளைப் பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை கோவை மாவட்டத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...