காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் 2 வாரத்தில் அமையும்: திரையுலகினர் நம்பிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் திரையுலகினர் சார்பில் அறவழிப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர்கள் நாசர், விஷால், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினர். மேலும் இந்தச் சந்திப்பில், காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திரைத்துறை சார்பில் பெறப்பட்ட கையெழுத்து மனுவை வழங்கினர்.

ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொன்வண்ணன் ஆகியோர் கூறியதாவது:- காவிரிக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் திரைத்துறையினர் 5,000 பேர் கையெழுத்திட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தோம். காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார், என்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...