திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதலமைச்சர் குறித்த விளம்பரம் நிறுத்தம்

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததற்கு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகிறார். பூசாரி அந்த பெண்ணுக்கு அர்ச்சனை செய்யும் போது அந்தப் பெண், சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்ல, சாமி பெயருக்கு என்கிறார். இதற்கு பூசாரி..எந்த சாமிக்கு என்று கேட்க..அந்தப் பெண் நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்கிறார். திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்தவர்கள் இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு தற்போது மீம்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விளம்பரத்தை திரையரங்குகளில் ஒளிபரப்புவதை நிறுத்த தமிழக செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "முதலமைச்சர் குறித்து திரையரங்குகளில் வெளியான விளம்பரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டு, அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது," எனக் கூறினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...