பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உதகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளும், இயற்கை சூழல் நிறைந்த மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது அங்கு கோடை சீசன் நிலவி வருவதால், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. 

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்பளர்கள், தட்டுகள், பைகள் போன்றவற்றை வனப்பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் வீசி விட்டு செல்வதால் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அதை உட்கொள்ளும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருவதை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதித்தும், மாவட்ட எல்லைகளில் இதற்க்காக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.



ஆனாலும் சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உதகை படகு இல்லத்திற்க்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது. 

இதில் பள்ளி மாணவிகள் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதோடு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...