தமிழகம் முழுவதும் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்று தொடங்கிய இந்த ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு 30-ம் தேதி வரை நடக்கிறது.


தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்று தொடங்கிய இந்த ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு 30-ம் தேதி வரை நடக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு ஆன்-லைனில் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கலந்தாய்வில் பங்கேற்கலாம். விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.



அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.annauniv.edu மற்றும் http://tnea.ac.in என்ற இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 42 மையங்களில் பதிவு செய்யலாம்.

மேலும், கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்‍கு 044-22359901 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்‍கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...