மோசடி வழக்கில் கைதான கோவை தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் கொடுத்த மோசடி மற்றும் பாலியல் புகாரின் பேரில், இராமநாதபுரம் போலீசார் தி.மு.க., மாணவர் அணியின் கோவை மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தி.மு.க.,வின் தலைமை கழக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- கோவை மாநகர வடக்கு மாவட்ட மாணவர் அணியின் இணை அமைப்பாளர் வி. ஆறுமுகப் பாண்டியன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 'தற்காலிகமாக நீக்கி' வைக்கப்படுகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...