திருப்பூரில் பெய்த கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்து விபத்து: பெண் பலி, இருவர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெப்பசலனம் காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, நகரின் பல பகுதிகளில் மரம் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலை தண்ணீர்பந்தல் பகுதியில் துரைசாமி என்பவர் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். அந்தப் புதிய கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர், மழையின் காரணமாக இடிந்து அருகிலிருந்த ஒட்டு வீட்டின் மீது விழுந்தது. அதில், வசித்து வந்த மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி திருப்பதியின் மனைவி ஐஸ்வர்யாவின் மீது இடிபாடுகள் விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வீட்டிலிருந்த அவரது உறவினர்கள் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.



விதிகளை மீறி கட்டிடம் கட்டியிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று அருகிலிருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இறந்துபோன ஐஸ்வர்யாவிற்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...