திருப்பூரில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் பறந்த அ.ம.மு.க., கொடியினால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க., கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமான பா.ஜ.க., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் மே தினம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளங்கோ நகர் பகுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், அக்கட்சியின் கொடியினை கழற்றி அருகிலுள்ள சாக்கடையில் போட்டுவிட்டு, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட பா.ஜ.க.,வினர், இளங்கோ நகர் பகுதியில் முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க., கொடிக் கம்பத்தில் அ.ம.மு.க., கொடியேற்றியதைக் கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கட்சியினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...