தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுப்பு: தமிழக மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கியதை மாற்ற மறுப்பு தெரிவித்ததுடன், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மையங்களை மாற்ற முடியாது. அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மைனர் என்ற நிலையில், அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவது, மிகுந்த சிரமத்திற்குள்ளான காரியமாகும்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...