கூடலூரில் யானை தாக்கி இளைஞர் பலி: பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கருக்கபாளி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (29). நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வேண்டும், கிராமத்தைச் சுற்றி அகழி வெட்ட வேண்டும், சோலார் மின்வேலி அமைத்து காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி மக்கள் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் உள்ள பாடந்துறை பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் காட்டு யானைகளிடம் இருந்து அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழகம் - கேரளா இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...