குட்கா விவகாரம் : சீல் வைக்கப்பட்ட பொருட்களை அரசு அதிகாரிகள் இன்றி திறந்த போலீசார்

கோவை : கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை கிராம நிர்வாக அலுவலர் , தாசில்தார் என்று எந்த அதிகாரிகளும் இல்லாத நிலையில் குட்கா பொருட்களை போலீசார் பேக்கிங் செய்வதாக கூறியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கோவை : கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் என்று எந்த அதிகாரிகளும் இல்லாத நிலையில் குட்கா பொருட்களை போலீசார் பேக்கிங் செய்வதாக கூறியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் சோதனை நடத்தினர். 

சுமார் 15 மணி நேரம் நீடித்த சோதனையின் அடிப்படையில் 750 கிலோ குட்காவும், 20 டன் மூலப்பொருட்களும், 3 லட்சத்து 24 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதில் 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இதில், குட்கா ஆலை தொடர்பான விசாரணையை வெளிப்படைத்தன்மையாக நடத்தக் கோரி, ஆலையின் முன்பாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலைக்குள் இன்று காலை 10 மணி அளவில் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நுழைந்தனர். 

'எதற்காக மீண்டும் காவல்துறையினர் ஆலைக்குள் சென்றுள்ளார்கள்?' என்று டி.எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் கேட்ட போது, "கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க குட்கா பொருட்களை பேக்கிங் செய்யும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

கிராம நிர்வாக அலுவலர் , தாசில்தார் என எந்த அரசு அதிகாரிகளும் இல்லாத நிலையில், காவல் துறையினரே தன்னிச்சையாக குட்கா பொருட்களை பேக்கிங் செய்வதாக கூறியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. 

சீல் வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சீலை பிரிக்க வேண்டுமானால் அந்த ஊரின் அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான் பிரிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் காவல் துறையினரின் இந்த செயல்பாடுகள் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...