நுரையுடன் பவனி வரும் நொய்யல் : சாய ஆலைகளால் பாழாகும் வாழ்வாதாரம்

திருப்பூர் : மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்வதையறிந்த சாய ஆலை உரிமையாளர்கள் அதில் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் நுரை பொங்கப் பாய்ந்து சென்றது.

திருப்பூர் : மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்வதையறிந்த சாய ஆலை உரிமையாளர்கள் அதில் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் நுரை பொங்கப் பாய்ந்து சென்றது. 



திருப்பூர் மாவட்டத்தின் ஜீவ நதியாக விளங்கி வந்த நொய்யல் ஆறு தற்போது சாக்கடை கழிவுகள் செல்லும் பெரிய கால்வாயாக மட்டுமே உள்ளது. இந்த நதியில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. மற்ற நேரங்களில் வற்றிய நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக, சாய ஆலை அதிபர்களால் இந்ந நதி மூலம், சாயக் கழிவுகளை வெளியேற்ற முடியாத சூழல் இருந்து வந்தது.

 

பொதுவாக 'ஜிரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் முறையில் சாய கழிவு நிரை சுத்திகரித்தால், அந்த தொழிலதிபர்களின் லாபம் குறையும். அதனால், மழை நேரங்களில் நொய்யல் நதியில் செல்லும் நீரில் சாய ஆலைக் கழிவுகளை வெளியேற்றி நிம்மதி கொள்கின்றனர்.

சாய ஆலைக் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என நீதி மன்றங்கள் தீர்ப்பளித்தும் தொடர்ந்து சாய ஆலைகள் வெளியேற்றும் சாயக் கழிவுகளால் இந்த நதியில் செல்லும் நீரை நம்பியிருந்த சில விவசாயிகளும் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி விட்டனர். தொடர்ந்து சாய கழிவுகளை நொய்யல் நதியில் விட்டதால், நொய்யலை நம்பி இருக்கும் ஓரத்துப்பாளையம் அணை, மக்கள் பயன்படுத்த முடியாத நஞ்சு மிகுந்த கழிவுகள் கொண்ட அணையாக மாறியுள்ளது. மேலும், இந்த அணையைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களும் மலட்டுத் தன்மை அடைந்துள்ளது.



மனிதர்கள் பேணிக்காக்க வேண்டிய வளங்களில் மிக முக்கியமானது நீர் வளம். அதனைத் தூய்மையாக வைத்திருக்கவும், பேணிக்காக்கவும் பொதுமக்கள் மட்டும் முயன்றால் போதாது, மாசு ஏற்படுத்தும் ஆலைகளும் அதனைக் கண்காணிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தம் பணியை உணராமல் இந்த சீர்கேடு என்றும் மாறாது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...