ஆளில்லா விமானத்தை உருவாக்க 'எம்.ஐ.டி.' கல்லூரிக்கு ஆலோசகரானார் நடிகர் அஜித்

சென்னை : சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்க இருக்கும் நவீன ஆளில்லா விமானத்திற்கு ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை : சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்க இருக்கும் நவீன ஆளில்லா விமானத்திற்கு ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் அஜித்குமார் விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார். அதே நேரத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும் திறமை பெற்றுள்ளார். அவர் ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இந்நிலையில் அஜித்-க்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.

ஆளில்லா விமானம் மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித்குமாரை எம்.ஐ.டி. நியமித்துள்ளது. அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் கல்லூரிக்கு அவர் வந்து செல்லும் போதும் அவருக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது. அந்த பணத்தை கல்லூரி ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கியுள்ளார் அஜித். 

இதனால் குஷியான அவரது ரசிகர்கள், இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...