பள்ளி தேர்வுகள் காரணமாக 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வலர் அமைப்புகள் சார்பில் விவசாயிகளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், கோழி மற்றும் முட்டை போன்ற பொருட்கள் ஒரே இடத்தில் 'நம்ம ஊர் சந்தை' என்ற பெயரில் விற்பனை செய்யும் திட்டம் கோவையின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி பள்ளி

அதன்படி, நம்ம ஊர் சந்தை திட்டத்தை கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். இதன் ஒரு பகுதியாக நம்ம ஊர் சந்தை திட்டம் வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. 

இந்த சந்தையில் 20-க்கும் மேற்பட்ட கடை அமைக்கப்பட்டு இருந்தது. குறைந்த விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பல வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த சந்தையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். 

இந்த நிலையில், வரும் 13-ம் தேதி வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் 'நம்ம ஊர் சந்தை' நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...