உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது. 



தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 125 -வது நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன. 



தேசிய அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பெரிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் 44 இனங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஆயுத்தமாகியுள்ளன. 

ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ரெட்ரீவர்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பக்ஸ், கிரேட் டேன்ஸ், டாபர்மென் என பலதரப்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று கீழ்ப்படிதல், மோப்ப சக்தி, ஒய்யாரமாக நடந்து வருவது என பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாய் இனங்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் தனித்துவ நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. சீசனையொட்டி உதகை வந்துள்ள சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்துச் செல்கின்றனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...