குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்பு உள்ளது : கோவையில் ஸ்டாலின் பேட்டி

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார்.

கோவை : குட்கா விவகாரத்தில் கைதாகி கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறைக்கு சென்று சந்தித்தார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரிக்கும் ஆலையில் கடந்த வாரம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க தொண்டர்கள் அந்த ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதில், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். இது பழிவாங்கும் செயல் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், கைதைக் கண்டித்து கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க தொண்டர்களை சந்தித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குட்கா விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி-க்கு தொடர்பு உள்ளது. நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி , கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். உண்மை வெளிவர போராடியதிற்கு தி.மு.க தொண்டர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது சர்வாதிகாரம் போன்றது. 

எனவும், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறைக்கு செல்வதை மறைப்பதற்காக இதெல்லாம் நடக்கிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தும். அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். விஜயபாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். தண்டனையில் இருந்து தப்பிக்க இது போன்ற பொய் வழக்குகளை தி.மு.க தொண்டர்கள் மீது பதிவு செய்து வருகின்றனர்" என்றார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...