தொடங்கியது அக்னி நட்சத்திரம் , கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலம் தொடங்கியது முதல் கோவையில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் நீடித்து, அதாவது மே 28-ம் தேதி அன்று நிறைவு பெறும். இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 33.5 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

கோவையில் கோடை மழை 130 மில்லி மீட்டர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக கோவையில் வெயிலின் தாக்கம் குறையும். 

அதேசமயம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாகவே காண வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...