மழைநீர் தேங்கிய குழியில் விழுந்து சிறுவன் பலி : பேரூராட்சி அலுவலகத்தை சி.பி.எம்., கட்சியினர் முற்றுகை

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு, பேரூராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு, பேரூராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் இந்திரா நகர் பகுதி உள்ளது. சுகாதாரப் பணியில் ஈடுபடும் தலித், அருந்ததியர் வாழும் இப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. இந்நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வரும் சோமசுந்தரம், சாந்தாமணி தம்பதியினரின் மகன் மனோஜ்குமார் (10), சாக்கடை, மழைநீர் தேங்கிய குழியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த இரண்டு நாட்களாகக் கோவையில் பலத்த மழை இரவு நேரத்தில் பெய்து வருகிறது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் அன்னூர் பகுதியில் மழையின் அளவு கூடுதலாக பதிவாகியுள்ள நிலையில், சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமலும், தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லாததாலும், குழியான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக அந்தக் குழியில் விழுந்து உயிரிழந்தான். 



இந்த நிலையில், சிறுவனின் மரணத்திற்கு அன்னூர் பேரூராட்சியின் அலட்சிமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர் தலைமையில் ஏராளமானோர் திரண்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் பேச்சுவார்தை நடத்தி, பலியான சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...