குடிபோதையில் மாடியில் இருந்து விழுந்த இளம் பைனான்ஸியர் உயிரிழப்பு

காங்கயம் : கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கயம் :  கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

காங்கயம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (29) கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

வீட்டிற்கு சென்ற அவர், பால்கனி அருகே நின்று கொண்டு இருந்தபோது, போதை தலைக்கேறியதால் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...