பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இன்று காலை 40 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் தியாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அரசு விதிமுறைகளின்படி, பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா..?, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா..?, வாகனங்களின் பிரேக், கியர் மற்றும் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா..? போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், சந்தேகத்திற்குரிய பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன், தானே பேருந்தினை ஓட்டி அவற்றின் தரம் குறித்து சோதனை செய்தார்.

மேலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி, பள்ளி வாகனங்களை இயக்குவது, அதிவேகமாகப் பேருந்துகளை இயக்குவது, பள்ளி குழந்தைகள் வாகனங்களை விட்டு இறங்கும் முன்பாக வண்டியை நகர்த்துவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த விதிகளை மீறுவோரின் வாகன உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாற்பது வயதைக் கடந்த ஓட்டுனர்கள் உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...