தொடர் மழையால் பின்னலாடை நிறுவனங்களுக்குள் தேங்கி நிற்கும் வெள்ளம் : மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

திருப்பூர் : திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக பின்னலாடை நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏற்பட்ட இழப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக பின்னலாடை நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏற்பட்ட இழப்பிற்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹார்வி ரோடு சிட்கோ பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை திருப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் மழைநீர் புகுந்தது. 

இதில், நிறுவனங்களில் பின்னலாடை உற்பத்திக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் மட்டுமின்றி, டெலிவரிக்கு தயாராக இருந்த பின்னலாடைகளும் சேதமாகின. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மாநகராட்சியின் லட்சுமி நகர் பகுதியிலிருந்து ஹார்வி சாலையை இணைக்கும் வகையிலான சாக்கடையை அமைக்க, அங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கியும் கூட, மாநகராட்சி நிர்வாகம் முறையான திட்டமிடல் இல்லாமல் சாக்கடை கால்வாய்களை அமைத்ததே மழைநீர் நிறுவனங்களுக்குள் செல்லக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், இதுபோன்ற கனமழை பெய்யும் பொழுதெல்லாம், பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும், இது குறித்து மாநகராட்சியிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பின்னலாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...