கோவை - செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் : சேலம் கோட்ட மேலாளர்

கோவை: கோவையில் இருந்து பரிட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து பரிட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.

புதிய மண்டல மேலாளராகப் பதவியேற்ற பின் கோவைக்கு வந்த யு.எஸ். ராவ் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " மண்டல மேலாளராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கோவை ரயில்நிலையம் வந்துள்ளேன். தமிழகத்தில் இரண்டாவது முக்கிய நகரமான கோவையில், பயணிகளின் வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறை இருந்தால் அதனை உடனே நிவர்த்தி செய்வேன். 

பயணிகள் வசதிக்காக முதல் லிப்ட் சில நாட்களில் இயக்கப்பட உள்ளது. இரண்டாவது லிப்ட் ஆறு மாதத்திற்குள் இயக்கப்படும். 

ரயில் நிலையத்திலுள்ள 4 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலாளர் அறை அருகே உணவுக்கூடம் அமைப்பதற்குப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. வருகின்ற வருடங்களில் பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு செயல்பட உள்ளோம்.

நகரும் படிக்கட்டுகள் மின்சார பற்றாக்குறையின் காரணமாக அவ்வப்போது இயங்கவில்லை. விரைவில் அது சரிபடுத்தப்படும்.

இரு அடுக்கு ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு சேலம் கோட்டத்தின் சார்பாக அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அடுக்கு ரயில் சேவைக்கான நேரம் மற்றும் தேதி இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கப்படும். பரிட்சார்த்த முறையில் செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. பயணிகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ரயில்களை மீண்டும் இயக்கத்  தலைமையிடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு தற்போது ரயில்கள் அதிகப்படுத்த வாய்ப்பில்லை," என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...