புரோ கபடி விதிமுறைகளின் அடிப்படையில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் தொடக்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது.

தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது. 



தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாகும். தற்போது, கபடி விளையாட்டில் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி புரோ கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உள்விளையாட்டு அரங்கில் ரப்பர் மேட் அமைத்து, அதில் வீரர்கள் விளையாடவேண்டும். மேலும், வீரர்கள் காலில் ஸ்போர்ட்ஸ் காலணி அணிந்து விளையாடவேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் கபடி போட்டிகள் தனியார் திருமண மண்டப உள்அரங்கில் இன்று தொடங்கியது. புரோ கபடி விதிமுறையின்படி முதன் முறையாக தமிழகத்திலேயே திருப்பூரில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்துகொண்டன. நாளை மாலை வரை நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...