சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில் விடுத்துள்ள அறிவிப்பில் :- அரக்கோணம் ரயில்வே கோட்டத்தில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தப் பணிகள் இன்றோ அல்லது நாளையோ முடிவு பெறும். இந்தப் பொறியியல் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாளைய (மே 06) ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.  

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :

1. (ரயில் எண். 12674) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், 2. (ரயில் எண். 12675) சென்னை சென்ட்ரல் - கோவை வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், (ரயில் எண். 12676) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல,  நாளை இயக்கப்படும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...