கோடை மழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு உத்தரவு

கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கோவை நகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள பிரதான குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், மழைக்கு நடுவே சூறாவளிக்காற்று வீசுவதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. ட்ரான்ஸ்ஃபாமர்கள் வெடித்து சிதறுகின்றன. இதனால், இரவு நேரங்களில் பல மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நகரின் முக்கியமான சாலைகளில் மரங்கள் வேரோடு முறிந்து வாகனங்கள் மீது விழுகின்றன. இதுமட்டுமில்லாமல், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும், ரயில்வே பாலங்களின் கீழ் பகுதியிலும், மழைநீர் தேங்கிக் கொள்வதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களின் உதவியோடு அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, ஆபத்து காலங்களில் உதவும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தயாராக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...