திருப்பூரில் கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கணியாம்பூண்டியில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (32) என்பவர் சிவன்மலை என்ற பெயரில் கிளீனிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், அனுபவத்தின் மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்கி வருவதாக அந்தப் பகுதியினர், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளையில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், ஆனந்த் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இணை இயக்குநர் மருத்துவர் சுந்தர்ராஜன் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் கணியாம்பூண்டியில் ஆனந்த் நடத்தி வந்த கிளீனிக்கை ஆய்வு செய்து சோதனை நடத்தினர். அப்போது, அவருடைய சான்றிதழ்களை சரிபார்த்த போது, அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...