நீலகிரியில் தொடங்கியது கோடை விழா : கோத்தகிரியில் இன்று 10-வது காய்கறி கண்காட்சி

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.



கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது. 



தொடர்ந்து, இரு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சி மற்றும் கோடை விழாவைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். 



கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.  



இந்தக் காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



இதில், மைசூர் கத்திரிக்காயை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெகா நந்தி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



இதுதவிர, காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை, மீன் உருவம், பட்டுப்பூச்சி உருவம், அலங்காரக் கோலம் மற்றும் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் விளைந்த மலை காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜான் சலிவன் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசத்து வருகின்றனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...