தமிழகத்தில் 2015-ம் ஆண்டு முதல் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை : மின்வாரிய தலைமை அலுவலகம்

கோவை : பருவநிலை காரணமாக ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர, 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை என மின்வாரிய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவை : பருவநிலை காரணமாக ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர, 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை என மின்வாரிய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி, மதுரையிலும் கடந்த சில நாட்களாக பரவலாகக் கோடை மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது.  பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் மின் பகிர்மான கட்டமைப்பின் மீது வீழ்ந்ததன் காரணமாக மின் கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததனாலும் மின்தடை ஏற்பட்டது.

 

இதன் காரணமாக, கடந்த ஏப்., 30-ம் தேதி முதல் கோவை மண்டலத்திலுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 416 எண்ணம் மின்பாதைகளுக்கும், 19 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஈரோடு மண்டலத்திலுள்ள ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் 173 எண்ணம் மின்பாதைகளுக்கும், 6 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 எண்ணம் மின்பாதைகளுக்கும், 21 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திலும் 21 எண்ணம் மின்பாதைகளுக்கும், 15 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் 865 மின்கம்பங்கள், 61 மின்மாற்றிகள் சேதமடைந்தன.

  

பலத்த காற்று மழையினால் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆகியவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு, மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பருவநிலை காரணமாக மின்சாதனங்களில் ஏற்படும் பழுதினால், ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தவிர மின்வெட்டு என்பது தமிழகத்தில் கடந்த 05.06.2015 முதல் அறவே இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மின்வாரிய தலைமை அலுவலக செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...