'நீட்' படபடக்கும் மாணவர்கள் : கோவையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதி

கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

தலைமுடியில் பின்னல் அணிந்து வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.

மகள் தலைவிரி கோலத்தில் தேர்வு எழுதுவதை விரும்பாத பெற்றோர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். 

படபடப்பு 

சாதாரணமாகவே தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு ஒட்டிக்கொள்வது வழக்கம். தற்போது நீட் தேர்வுக்காக,  இந்த உச்சகட்ட கெடுபிடிகள் காரணமாக தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அதிகபட்ச படபடப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கோவையில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட அதிகபட்ச படபடப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாகவே, வெள்ளலூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற தாய் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...