கோவையில் அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவர் இல்லாத பெண்களிடம், அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவர் இல்லாத பெண்களிடம்,  அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்(50). இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று படிப்பறிவற்ற பொதுமக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் பொள்ளாச்சியில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், தான் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறியதோடு, கணவன் இல்லாத பெண்களிடம், அரசின் விதவை உதவித் தொகை ரூ. 2,500 மாதந்தோறும் வாங்கித் தருவதாக கூறினார். மேலும்,  உதவித் தொகை பெறுவதற்கு முன் பதிவு தொகை செலுத்த வேண்டும் என்று கூறிய அவர் பெண்களிடம் ரூ. 500 வசூலித்தார். 

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது,  போலியாக மோசடி செய்வது தெரியவந்துள்ளது. தொடர்ந்து செந்திலை பிடித்து அவரது கையில் இருந்த பையில் சோதனை செய்தனர். இதில் கோவை மாநகரில் வயது முதிர்ந்த பெண்களிடம் பணம் ஏமாற்றியதும் தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலி அரசு அலுவலரை சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோசடியில் ஈடுபட்ட நபரைப் பிடித்தனர். அப்போது, தான் ஒரு அனாதை என்று கூறிய செந்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இதனால் மனம் இறங்கிய போலீசார் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அறிவுரை கூறி  அனுப்பி வைத்தனர். 



இந்த சம்பவம் குறித்த அப்பகுதியை சேர்ந்த சதாம் கூறுகையில், " அதிகாரி போல் நடித்து வயதானவர்களிடம் பணம் பறித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்த போது தான் அவர் மோசடி ஆசாமி என்பது தெரியவந்தது. வறுமையில் இருக்கும் முதியவர்களைக் குறி வைத்து ஏமாற்றும் இவர் போன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." என்றார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...