சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்து நாசம் : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மூவர் உயிர் தப்பினர்.

ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார்.  அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பத்குமார் மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், ஜீவானந்தம் ஆகிய மூவரும் இன்று காலை திருப்பூரிலிருந்து மாருதி 800 வகை காரில் திருமூர்த்திமலை கோவிலுக்குச் சென்றனர். 



அவர்களது கார் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்புறம் உள்ள பேனட்டில் இருந்து புகை வந்தது. இதனால் அச்சமடைந்த மூவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி எரியத் தொடங்கியது. பின்னர், தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது தொடர்பாக, தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். 

தீ விபத்தில்  கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...