திருப்பூரில் இயற்கை முறையில் விளைந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் மாதச் சந்தை

திருப்பூர் : நண்பர்கள் இயக்கம் சார்பாக திருப்பூரில் இயற்கை முறையில் விளைந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் மாதச் சந்தை இன்று நடைபெற்றது.

திருப்பூர் : நண்பர்கள் இயக்கம் சார்பாக திருப்பூரில் இயற்கை முறையில் விளைந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் மாதச் சந்தை இன்று நடைபெற்றது. 

திருப்பூரில் மங்கலம்  தெரு கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளாகத்தில் இயற்கை முறையில் தயாரித்த உணவுப் பொருள்களுக்கான மாதச் சந்தை இன்று நடைபெற்றது. இந்த சந்தையில், திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் சென்றனர். சந்தையில் இடம் பெற்ற பொருட்கள் அனைத்தும் இயற்கை விவசாய  முறையில் தயாரிக்கப்பட்டதாகவும்  ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 







உணவு வகைகள்

இந்த மாதச் சந்தையில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு வகையான பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியம், கருப்பட்டி பலகாரம், சிறுதானிய தின்பண்டங்கள், மரச்சக்கு எண்ணெய், நாட்டுக் கம்பங்கூழ், மலைத்தேன், முருங்கைத் தேன், சத்துமாவு, நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்திய பழச்சாறு, கீரைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், மண்ணால் செய்த மண்பாண்டங்கள், மேய்ச்சல் மூலம் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகள், நாட்டுக்கோழி முட்டை மற்றும் வாத்து முட்டை என பல்வேறு விதமான பொருட்கள் இடம் பெற்றிருந்தன. 



மேலும், சமையலுக்குத் தேவையான சமையல் பொடி, குளிப்பதற்கு குளியல் பொடி, பற்பொடி மற்றும் தேயிலை சேர்க்காமல்,  புதினா, அரம்பட்டை சேர்த்த தேநீர் பொடி என பல வகையான பொடி வகைகளும் இடம் பெற்றிருந்தன. 



இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அழகேஷ்வரி கூறியதாவது:- 

இந்த சந்தை மாதத்தில் ஒரு முறை நடைபெறுகிறது.  இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்குள்ள அனைவரும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், சத்திய மங்கலம், பல்லடம் மற்றும் திண்டுக்கல் என்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை ஏதும் வசூலிப்பது இல்லை. வரும் செலவினங்களை நாங்களே பகிர்ந்து கொள்கிறோம். 

விதிமுறைகள் 

இங்கு கடைகள் அமைப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. யாராவது இங்கு கடை அமைக்க விரும்பினால், நாங்கள் அவர் இருக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று, அங்கு இயற்கை முறையில் தான் விவசாயம் செய்யப்படுகிறதா? உணவுப் பொருட்களில் கலப்படம் இல்லாமல் இயற்கை முறையில் தயார் செய்கிறார்களா?  என்று ஆய்வு மேற்கொண்ட பின்னரே கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கிறோம்.

மேலும், பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் பொருட்களை  துணிப் பைகளில்  மட்டுமே கொடுத்து அனுப்புகிறோம்.  தின்பண்டங்கள் வாங்கிச் செல்பவர்களுக்கு  வாழை இலை, மற்றும் பூவரசம் இலை கொடுக்கப்படுகிறது. தற்போது பல்வேறு இடங்களிலும் இயற்கை அங்காடிகள் அமைந்துள்ளன. ஆனால், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், இங்குள்ள அனைத்துப் பொருட்களும் இயற்கை முறையில் தயாராகின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகமாக வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

மற்ற இயற்கை அங்காடிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு விலை குறைவாக உள்ளதாகவும் சந்தைக்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...