இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க அவசியமில்லை - கர்நாடக அரசு

டெல்லி : தற்போது இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க அவசியமில்லை என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி : தற்போது இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க அவசியமில்லை என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

​கடந்த 3-ம் தேதி காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகம் 4 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீர் இருப்பு தொடர்பாக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கர்நாடகம் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று கர்நாடகா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கர்நாடக அரசு இதுவரை தமிழகத்துக்கு திறந்து விட்ட தண்ணீர் அளவு எவ்வளவு என்பதைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 116.74 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்றும், வறட்சி காலங்களில் கூடுதலாக தமிழகத்துக்கு 16.66 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக ஏப்ரல் 30-ம் தேதி வரை 100.4 டி.எம்.சி. தான் திறந்து விடவேண்டும். ஆனால் கர்நாடகம் கூடுதல் நீரே தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. மேலும், தமிழக-காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் அளவு அதிகமாகப் பெய்துள்ளது. எனவே, குடிநீர் பிரச்சனை என்பது அவர்களுக்கு இல்லை. ஆனால், கர்நாடகத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தற்போது குடிநீர் தேவைக்கு மட்டும் அணையில் தண்ணீர் இருப்பு உள்ளதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட அவசியமில்லை என்றும் கர்நாடக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நாளை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.​

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...